dimanche 31 mai 2015

மௌனம்

மௌனம்

இதயத்தில் எண்ணங்கள் அலைமோதினும்
இதழ்களில் மௌனங்கள் குடியேறின
எதுஞ்சொல்ல முடியாத சூழ்நிலைகளும்
அவள்விழியும் என்பேச்சைக் கைதாக்கின

நெஞ்சத்தின் வார்த்தைகளை கண்பேசின
நீர்த்திரையின் பின்னிருந்து அவைபேசின
மஞ்சள் நிலவிரவின் கனவுகளையே
மறுபடியும் அசைபோட்டு அவைபேசின

நீர்சிந்தும் விழிகண்டு வருத்தமில்லை
நீசிரிக்க அவையழுதால் ஒன்றுமில்லை
பார்வையின் மொழியேன் புரியவில்லை?
பாரிலெங்கு மதற்குவரி வடிவமில்லை

வீயார்



மௌனம்

Aucun commentaire:

Enregistrer un commentaire