-
காதலின் ஆன்மா
அன்பின் அடையாளம்
ரசனையின் மிகைப்பாடு
உணர்வின் வெளிப்பாடு
முத்தம்

உதடுகள் குவியும்
நரம்புகள் புடைக்கும்
இதயங்கள் இணையும்
கவலைகள் மறக்கும்
முத்தம்

சிந்தையில்
எச்சம் அமிர்தமாகும்.
முத்தம்
உதடுகள்
சந்திக்கும் வைபவம்.
முத்தம்

மழையில் குளித்தாலும்
தாகம் தீர்க்காத உப்பு நீர்.
முத்தம்

கொடுக்கையில் பரவசம்
பெறுகையில் பேரின்பம்
முத்தம்

தடுத்துப் பார்க்காதீர்
கொடுத்துப் பாருங்கள்
உலகம் உங்கள் கையில்.

=======================
=கோவை ராமநாதன்