dimanche 31 mai 2015

“நானும் காதலிப்பேன்”


-
நானும் காதலிப்பேன்
காதலையும் காமத்தையும் பிரிக்க முடியுமானால்…
-

நானும் காதலிப்பேன்
கற்பனைகளும் கனவுகளும் தோன்றா விட்டால்…
-

நானும் காதலிப்பேன்
காலமும் கடல்அலையும் கரையாமல் இருந்தால்…
-

நானும் காதலிப்பேன்
கவலையும் கண்ணீரும் காணாமல் போனால்…
-

நானும் காதலிப்பேன்
கடலையும் கடற்கரையும் தீர்ந்து விட்டால்…
-

நானும் காதலிப்பேன்
கண்களும் மௌனமும் பேசாமல் இருந்தால்…
-

உண்மையைச் சொல்ல வேண்டுமானால்,
நானும் காதலிப்பேன்
என்னையும் காதலிக்க ஒரு “பெண்” கிடைக்குமானால்…
-

=
பழநிவேல்



“நானும் காதலிப்பேன்”

Aucun commentaire:

Enregistrer un commentaire