jeudi 28 mai 2015

சீனியர் சிட்டிசன் கைட்!

சென்னைக் காவல்துறை மற்றும் ஜீவாத்மா கைங்கர்யா ட்ரஸ்ட் ஒருங்கிணைந்து ‘சீனியர் சிட்டிசன் கைட்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இது முழுக்க முழுக்க முதியோர் நலன் கருதி வெளியிடப்பட்டிருக்கும் ஒரு கையேடு. இந்த நூலுடன் ஸ்மார்ட் கார்ட் ஒன்றும் தரப்படுகின்றது.
-

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியம் புத்தகத்தை வெளியிட ,முதல் பிரதியைப் டெபுடி கமிஷ்னர் பி.சரவணன் மற்றும் உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அசோக் நகர் r3 காவல் நிலைய அசிஸ்டெண்ட் கமிஷ்னர் வி.ஆறுமுகம் மற்றும் பல மூத்த குடிமகன்கள் பங்கேற்றனர்.
-

வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பு நலன் கருதி பல தகவல்களையும், பயனுள்ள குறிப்புக்களையும் உள்ளடக்கியுள்ளது ‘சீனியர் சிட்டிசன் கைட்’.

மேலும் விபரங்களுக்கு 9841012779 என்ற எண்ணை அழைக்கவும்.

=
தினமணி



சீனியர் சிட்டிசன் கைட்!

Aucun commentaire:

Enregistrer un commentaire