ஈரம்காய்ந்த விழிகள்மூடி கனவுஒன்று காணவா
காயமான இளமையினைக் கவிதையாகப் பாடவா
மறவேன்நான் என்றமனம் மறந்ததைநான் கூறவா
இறப்பொன்றே பிரிக்குமென் றேமாந்ததைக் கூறவா
அழியாதது காதலென்று எண்ணியதென் அறிவீனம்
பழியோரிடம் பாவமோரிடம் என்நிலையோ பரிதாபம்
காதலென்னும் தீயில்பட்டு இனியும்நான் வாடுவனோ
நூதனக் கொள்ளைசெய்யும் நங்கையரை நாடுவனோ
வீயார்
காதலெனும் நூதனக் கொள்ளை
Aucun commentaire:
Enregistrer un commentaire