-
==
கடற்கரை மணல் ஓவியம்
நண்டு பார்த்து ரசித்தது
அவளின் பாதச் சுவடுகள்!

————————


குதிரைகள் சுற்றி வந்தன
ஒன்றை ஒன்று முந்தவில்லை
குடை ராட்டினம்


————————–

ஊருக்குள் வெள்ளம்
ஊர் சுற்றக் கிளம்பியது
ஆத்து மீன்கள்

————————

மழையில் நனைகிறதென்று
கவலைப்பட்டது வண்டு
செடியில் பூக்கள்


—————————-

சுருட்டை முடிக்காரி
சுருட்டி விட்டாள்
தொலைந்தது மனசு

———————-

தண்ணீரில் கண்டமென்று
எந்த ஜோசியரும் சொல்லவில்லையே
வெள்ளத்தில் மிதந்தது செடி!

———————————-

-டி.என்.இமாஜான்
நகைச்சுவையான ஹைகூ கவிதைகள்