samedi 27 juin 2015

கண்காணா காதல்

கண்கள் இரண்டும் சந்தித்ததும் உள் பெருகிடும்
உணர்வுக்கு காதல் என்று பெயர் சூட்டி
இம்மானுடமும் தான் மயங்கிடுதோ

காதலில் சிக்குண்டு திருமணம் என்ற பெயரில்
ஒருவர் மனதை ஒருவர் ஆளும்
எண்ணத்தில் காதலும் கரைந்திடுதோ

கண்கள் காணா காதலிலே உள்ளத்தை
மட்டும் நேசிக்கும் காதலில்
உணர்வுகள் தோற்று காதல் பெருகிடுதோ

புறக்கண்கள் காண மறுத்ததை அகக்கண்கள்
கண்டுகொள்ள பயனற்று போகிறதே
புறகண்ணின் புரிதலும் தான்

உணர்வுகளை நீக்கி அகத்தை மட்டும்
நேசித்தால் காதலின் பெயரில்
தோற்று தான் போகாது பலரது வாழ்வும்

பி.கு: குக்கூ படத்தின் தாக்கம்



கண்காணா காதல்

Aucun commentaire:

Enregistrer un commentaire