லதாவும் கவினும் மனமொத்த தம்பதிகள். கவின் மைசூரில் பிறந்து வளரர்ந்தவன். இப்போது பெங்களூரில் வேலை பார்க்கிறான். லதா தமிழ்நாட்டின் தென்கோடி இல் இருந்து பெங்களுருக்கு வேலைக்கு வந்தவள்.வந்தவளுக்கு இந்த ஆடம்பரமும் நவநாகரீகமும் ரொம்ப பிடித்துப்போனது , அவளும் நவநாகரீக மங்கையாக வளைய வந்தாள் . கவினின் காதலுக்கு பாத்திரமானாள். நல்லபடி கல்யாணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
கவினின் பெற்றோருக்கு அவளை பிடித்திருந்தாலும் அவளின் 3/4 th ம், லெ கின்சும், கை இல்லாத டாப்ஸ் ம் பிடிக்கலை ; சரி, ஏதோ சின்னஞ்சிறுசு கல்யாணம் ஆனதும் சரி ஆகிவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கை இல் மண் விழுந்தது.
அவள் எப்போதும் போலவே வளைய வந்தாள் . கவினுக்கும் அதில் ஏதும் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை . அதனால் ஏதும் சொல்ல முடியாத அவனின் பெற்றோர், மைசூருக்கு பயணமானார்கள். இப்படியே நாட்கள் உருண்டு ஓடின. ஒருமுறை அவர்கள் லீவுக்கு மைசூர் சென்றார்கள். அவர்கள் இருவரும் பிரியமாய் இருந்த போதும் குழந்தை செல்வம் இல்லாததால் பெற்றவர்களின் சொல்படி, ஒரு டாக்டரை பார்க்க எண்ணினார்கள்.
அப்போது எதேர்ச்சையாக வெளிநாட்டில் இருந்து லீவுக்கு வந்திருந்த தூரத்து சொந்தமான ஒரு டாக்டர் இவங்க வீட்டுக்கு வந்தார்.அவர் கவினின் சிறுவயது தோழனும் கூட. அவரிடம் இவர்கள் பேச்சு வாக்கில் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னார்கள்.அவர் சிரித்த படியே நான் ஒன்று சொல்கிறேன் அது படி ஒரே ஒரு மாதம் செய்து பாருங்கள், பலன் இல்லாவிட்டால் அப்புறம் நீங்க டாக்டரை பார்க்கலாம் என்றார். அவர் ஒரு மனோதத்துவ டாக்டர்.
இவர்களும், இத்தனை நாள் போயாச்சு இன்னும் 1 மாதம் தானே, இவன் ஏதோ சொல்கிறான், செய்து தான் பார்க்கலாமே என்று நினைத்து , அப்படி என்ன செய்யணும் என்றார்கள்.அவரும் நான் சில கேள்விகள் கேட்கிறேன் அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்றார். இவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
"கவின், உங்கள் ஆபீஸ் இல் உனக்கு நைட் ஷிப்ட் இருக்கா? "
" ஒ...இருக்கே, நான் தான் வேண்டாம் என்று போவதில்லை " என்றான் கவின்.
"நேரம் எப்படி" ? என்றார் டாக்டர்.
" இரவு ஒரு 8 லிருந்து காலை 5 -30 வரை" என்றான் கவின்.
"cool ! இனி 1 மாதத்துக்கு நீ நைட் ஷிப்ட் ஒப்புக்கொள்" என்றார் டாக்டர்.
"என்னடா சொல்கிறாய்"? என்று கவினின் அம்மா கேட்டார்கள்.
" இருங்க அம்மா, கொஞ்ச நேரம் " என்றார் டாக்டர்.
அந்த அம்மாள் தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.
தொடரும்..................
Latest treatement by Krishnaamma :)
Aucun commentaire:
Enregistrer un commentaire