dimanche 26 octobre 2014

பேரன்பில் மலர்ந்திருக்கும் பறவைப்பூ

பேரன்பில் மலர்ந்திருக்கும் பறவைப்பூ

வெளிப்படுத்த இயலாத பேரன்பை

தன் சிறகில் சுமந்து திரியும் பறவை

உன் தோளில் வந்தமர்கிறது.

அதன் கண்களில் வழிகின்ற அன்பின் துளிகளை

கைகளில் ஏந்திக்கொண்டு

செய்வதறியாது திகைக்கிறாய் நீ.

சுமையின் களைப்பில் உன் மார்புக்கூட்டுக்குள்

விழுந்து உறங்கிவிடுகிறது.

அதன் முதுகை வருடிக்கொண்டே

உன் தோட்டத்தில் ஒரு பூச்செடி

நடுகிறாய்.

விடியலில்,

தோட்டமெங்கும் பூத்துக்கிடக்கின்றன*

பேரன்பின் பறவைப்பூக்களும்

ஒரு பறவை விட்டுச்சென்ற

பிரபஞ்சமும்.


-நிலாரசிகன்.






பேரன்பில் மலர்ந்திருக்கும் பறவைப்பூ

Aucun commentaire:

Enregistrer un commentaire