mercredi 8 avril 2015

குறையொன்றும் இல்லை !

குறையொன்றும் இல்லை maraimoorthi kanna....

'" எது நடந்ததோ

அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ

அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க வேண்டுமோ

அதுவும் நன்றாகவே நடக்கும் "


என்ற இந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பொன்னான

மொழிகளைக் கண்டு கேட்டு சில சமயம் ஒரு அசூயை , விரக்தி அடைந்தது உண்டு.

தற்போது ஹிந்தி மற்றும் தமிழ் மகாபாரத அலை மீண்டும் மீண்டும் விடாது

அடித்துக் கொண்டு இருக்கிறது மக்களின் மனதில் தொலைக்காட்சித் தொடர் மூலமாக.

சரி , மீண்டும் மீண்டும் இது வந்து நம்மை ஈர்க்கிறது ....ஏதோ ஒரு தகவல் நமக்கு

அதில் பொதிந்து இருப்பது போல எனக்குப் பட்டது.


இக்கலியுகத்தில் இத்தனை கொடுமைகளும் அநியாயங்களும் நாளும்

நம்மைப் போல அனைவரின் வாழ்விலும் தினமும் அரங்கேறிக் கொண்டு தானே

இருக்கிறது. அப்போது , அது என்ன நன்றாகவா நடை பெற்றது என ஒரு

பெரிய பகுத்து அறிவு கேள்வி எழுந்தது.


அதற்குப் பதில் தேடும் முகமாக என் மேலோட்டமான சிந்தனையை விடுத்து ,

தெய்வத்தைக் குறை சொல்லும் பாங்கை சற்றே விடுத்து அமைதியாக

யோசித்துப் பார்த்ததில் ஓர் உண்மை , தத்துவம் தெரிந்தது. அதில் முதல் வாக்கியம் ,


கடந்த காலம் - உணர்த்துவது :


நாம் கடந்த கால கசப்புகளை மறந்து அதில்

நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அதிலேயே முழுகி விடாமல்

உழலாமல் அதை விட்டு வெளியே வர வேண்டும்.


இரண்டாவது வாக்கியம் உணர்த்துவது ...


அவ்வாறு நாம் நம் கடந்த கால சோகங்களை மறந்து விட்டு நம் தவறுகளைத்

திருத்திக் கொண்டு நிகழ்காலத்தில் செய்யும் செயல்கள் நன்றாக நடக்கும்.


மூன்றாவது ....


விதைத்தது தானே முளைக்கும் ?!

சரியான நிகழ்கால செயல்கள் என்பது மாமரத்தில்

சுவையான கனிகள் விளைவதைக் குறிப்பதாகும்.


நாம் எண்ணும் ,செய்யும் யாவற்றையும் ' சர்வம் கிருஷ்ணார்ப்பணம் '

என்று நாள் துவக்கத்திலும் , முடிவிலும் சொல்லி அதைச்

செய்வதில் உள்ள மகிமையையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

எல்லாவற்றையும் அந்த கடவுளுக்கு அர்பணித்து விட்டு பலன்களை

எதிர்பாராமல் சிந்தனை சிதறாமல் முழு கவனத்துடன் நாம் செய்யும் செயல்களின் நற் பலன்கள்

அவனின் கருணையினால் நமக்கு கட்டாயம் வந்து சேர்கின்றன என்பது

நிதர்சனமானது.


நாடென்ன செய்தது நமக்கு என்று கேளாமல் நீ என்ன செய்தாய்

அதற்கு என்ற அதில் தொனிக்கும் உள்ளர்த்தக் கேள்விக்கு

விடையாக நாம் எதைப் பற்றியும் குறை கூறாமல் நம் வேலையை மட்டும்

பார்க்க வேண்டும் என்பதும் தெளிவானது.


ஒரு பால் குடத்தில் நாம் ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றினால் என்ன

யாருக்குத் தெரிந்து விடப் போகிறது என எண்ணாமல் அனைவரும்

நல்லது நடக்க நம் பங்களிப்பையும் தர வேண்டும் .

எனவே இப்போதெல்லாம் அதைக் கேட்கையில் குறை சொல்லத்

தோன்றுவதில்லை. மாறாக என்னிடம் உள்ள குறைகளை களைய த்

துவங்கி இருக்கிறே,ன்.


சர்வம் கிருஷ்ணார்ப்பணம் !






குறையொன்றும் இல்லை !

Aucun commentaire:

Enregistrer un commentaire