” என்னங்க ” (அர்த்தம் பலவிதம்)பாத்ரூமில் நின்று ” என்னங்க ” என்று அழைத்தால்
பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம்
சாப்பிடும் ஹோட்டலில் ” என்னங்க ” என்று அழைத்தால்
பில்லை கட்டு என்று அர்த்தம்.
வீட்டு வாசலில் நின்று யாருடனாவது
கைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது
வீட்டின் உள்ளில் இருந்து ” என்னங்க ” என்று உச்சஸ்தாயியில்
சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம்.
கல்யாண வீட்டு கூட்டத்தில்
“என்னங்க ” என்று சத்தம் வந்தால்
எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார்
அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம்
துணிக்கடையில் நின்று ” என்னங்க ” என்று அழைத்தால்
அவள் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம்
வண்டியில் செல்லும் போது ” என்னங்க ” என்றால்
பூக்கடை அவள் கண்ணில் பட்டதென்று அர்த்தம்.
மருத்துவமனை சென்று ” என்னங்க ” என்று அழைத்தால்
டாக்டரிடம் என்ன பேசவேண்டும் என்று கேட்கிறாள்
என்று அர்த்தம்.
வெளியே எட்டி பார்த்தவண்ணம் ” என்னங்க ” என்று
அழைத்தால் யாரோ அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம்.
பீரோவின் முன் நின்று ” என்னங்க ” என்று அழைத்தால்
பர்ஸுக்கு வேட்டு வைக்கிறாள் என்று அர்த்தம்.
சாப்பாட்டை எடுத்து வைத்து ” என்னங்க ” என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தால் இப்போ சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம் …
…..
இன்னும் உண்டு நிறைய பொருள்படும் ” என்னங்க ” எனும் சொல்
My friend was just listing one by one.
I just interrupted and said
நீங்கள் சொல்றதெல்லாம் மனைவி சொல்றதாகவே இருக்கு. இந்த காலத்தில் எந்த பெண் சார், கணவனை பெயர் சொல்லாமல் இருக்க 'என்னங்க' என்று அழைக்கிறாள்?வேறு ஆண்களையாவது தப்பித் தவறி .சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்தால் 'என்னங்க ' என்று அழைக்கிறார்கள்.
கண வனாவது பெயர் சொல்லிக் கூப்பிடுகிறான். மனைவி 'என்னடா' என்று சொல்வது தான் நடை முறை. அது தான் உரிமையையும் சகஜத் தன்மையும் வெளிப் படுத்துவதாகவும்,'என்னங்க' என்றெல்லாம் அழைத்தால் ஒரு போலித்தனம் வந்து விடுவதாக சொல்லிக் கொள்ளு கிறார்கள்.
வேறு சில situations கற்பனை பண்ணி கணவன் மனைவியிடம் என்ன சொல்லுவான் என்று கற்பனை பண்ணி எழுதிப் பாருங்களேன்.
'ஏய் ,ஏண்டி 'என்றெல்லாம் எழுதினால் அதில் அதிகாரம் தான் தொனிக்கும்.இது மாதிரி வெவ்வேறு அர்த்தங்கள் தொனிக்காது .
'என்னங்க '- என்ற வார்த்தை மறக்காமல் இருப்பதற் காகவாவது 'டிவி' சீரியல் தொடரட்டும்
பெண்கள் என்றுமே சுவாரஸ்யம் ஆனவர்கள்.
என்னங்க ,அப்படித்தானே?'ஆமென்' தான் சொல்லியாக வேண்டும்.
Jayasala 42
ennanga ungalith thaane
Aucun commentaire:
Enregistrer un commentaire